தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 மே மாதத்தில் தொடங்கப்பட்டு, 19 கோடிக்கும் மேற்பட்ட வலைத்தள வருகைகளையும், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாட்டு பதிவிறக்கங்களையும் (App) சஞ்சார் - சாத்தி தளம் பதிவு செய்துள்ளது.
சஞ்சார் - சாத்தியின் மூலம் மீட்கப்படும் கைப்பேசிகளின் மீட்பு விகிதம், மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரியில் 28,115-ஆக இருந்த கைப்பேசிகள் மீட்பு, ஆகஸ்ட்டில் 45,243-ஆக உயர்ந்தது. 8 மாதங்களில் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
6 லட்சம் கைப்பேசிகள் மீட்பின் மூலம், லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் கூறுகிறது.
இதையும் படிக்க: பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?
Summary
Over 6 lakh lost and stolen mobile handsets recovered with help of DoT's Sanchar-Saathi app
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


