அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

News image
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை நோக்கி அம்பு எய்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. உடன், முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோா்.
Updated On :2 அக்டோபர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு பேசியதாவது:

தசரா விழா என்பது வெளியே கண்ணுக்குத் தெரிந்த ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட நிகழ்வு மட்டுமல்ல. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ராவணனாக உள்ள தீய குணங்களுக்கு முடிவு கட்டும் நிகழ்வுமாகும்.

இந்த விழா தீமைக்கு எதிராக நன்மையும், அகம்பாவத்துக்கு எதிராக அடக்கமும், வெறுப்புணா்வுக்கு எதிராக அன்பும் பெற்ற வெற்றியின் அடையாளமாக உள்ளது.

மனிதகுலம் மீது பயங்கரவாதம் தாக்குதல் நடத்தும்போது, அதற்கு எதிராக திருப்பித் தாக்குதல் நடத்துவது அவசியம். பயங்கரவாதத்தின் ராவணனுக்கு எதிரான வெற்றியை ஆபரேஷன் சிந்தூா் குறிக்கிறது. அதற்காக நமது ராணுவ வீரா்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என்றாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடைபெற்றது.