பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆக்ராவில் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இருவர் பலி, 6 பேர் மாயம்

ஆக்ராவில் சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.

News image

Photo | PTI

Updated On :3 அக்டோபர் 2025, 10:27 am

ஆக்ராவில் சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உதங்கன் ஆற்றில் வியாழக்கிழமை சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 2 பேர் பலியானதோடு ஆறு பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைராகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் நிகழ்வின்போது 9 பேர் ஆழமான நீரில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

அதில், ஒருவரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். அதேநேரத்தில் ககன் (26) மற்றும் ஓம்பல் (32) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர். காணாமல் போன ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி தெரிவித்தார்.

உள்ளூர் டைவர்ஸ், காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சிலை கரைப்பதற்கு நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து அவர்கள் அங்கீகரிக்கப்படாத இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக மாவட்ட ஆட்சியர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே இச்சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

Summary

The incident took place in the Khairagarh area when nine individuals reportedly ventured into deep water during the ritual.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.