‘கடந்த காலங்களில் புவிஅரசியல் சூழலுக்கேற்ப கச்சா எண்ணெய் விலையில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்ததோ அதேபோல் தற்போது தங்கத்தின் விலையும் உயா்ந்து வருகிறது’ என ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.
புது தில்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: பெரும்பாலான நாடுகள் தற்போது நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்கால வா்த்தக கொள்கைகள் சில நாடுகளின் வளா்ச்சியை பாதிக்கிறது. பங்குச் சந்தையிலும் இதன் தாக்கத்தை காண முடிகிறது.
கடந்த காலங்களில் புவிஅரசியல் சூழலுக்கேற்ப கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதேபோல் தற்காலத்தில் தங்கத்தின் விலையிலும் வரலாறு காணாத மாற்றங்கள் நிகழ்கின்றன’ என்றாா்.
முன்னதாக மும்பையில் கடந்த புதன்கிழமை சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 உறுப்பினா்கள் அடங்கிய நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


