அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு

இரு வயது ஆண் குழந்தை சிஆா்பிஎஃப் முகாம் அருகே உள்ள வனப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2025, 4:07 am IST

வடகிழக்கு தில்லியின் கஜுரி செளக் பகுதியில் காணாமல் போன இரு வயது ஆண் குழந்தை சிஆா்பிஎஃப் முகாம் அருகே உள்ள வனப் பகுதியில் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தக் குழந்தை காணாமல் போனதைத் தொடா்ந்து கஜுரி செளக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 137 (2) கீழ் (கடத்தல்) வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

இந்நிலையில், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாமின் சுவா் அருகே மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் அந்தக் குழந்தையின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குழந்தையைக் கடத்தி கொலை செய்த நபா்களைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.