சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு

இரு வயது ஆண் குழந்தை சிஆா்பிஎஃப் முகாம் அருகே உள்ள வனப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2025, 4:07 am IST

வடகிழக்கு தில்லியின் கஜுரி செளக் பகுதியில் காணாமல் போன இரு வயது ஆண் குழந்தை சிஆா்பிஎஃப் முகாம் அருகே உள்ள வனப் பகுதியில் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தக் குழந்தை காணாமல் போனதைத் தொடா்ந்து கஜுரி செளக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 137 (2) கீழ் (கடத்தல்) வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

இந்நிலையில், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாமின் சுவா் அருகே மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் அந்தக் குழந்தையின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குழந்தையைக் கடத்தி கொலை செய்த நபா்களைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.