/
பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேயை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினாா்.
இந்தியா-பூடான் இடையே ரயில் பாதை அமைக்க அண்மையில் இருநாட்டு அரசுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து அந்நாட்டுக்கு விக்ரம் மிஸ்ரி சென்றாா்.
அங்கு அவா் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக், பிரதமா் ஷெரிங் டோப்கே, வெளியுறவு அமைச்சா் டி.என்.துங்க்யெல் ஆகியோரைச் சந்தித்ததாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
இதுதொடா்பாக பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பூடான் இடையே போக்குவரத்து இணைப்பு, நீா்மின் திட்டம், வா்த்தகம், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடா்பு உள்ளிட்டவை குறித்து விக்ரம் மிஸ்ரியுடன் ஆலோசித்தேன்’ என்றாா்.
தொடர்புடையது

அணுசக்தி, சமையல் எரிவாயு ஏற்றுமதி: அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா ஆலோசனை

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!

அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு - பாதுகாப்பு, மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



