விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹைதராபாத் மாணவர் பலி

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவர் பலி தொடர்பான செய்தி.

News image

அமெரிக்கா - கோப்புப்படம்.

Updated On :4 அக்டோபர் 2025, 12:48 pm

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் பலியானதாக முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த அவர், தானும் மற்ற கட்சித் தலைவர்களும் மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்ததாகக் கூறினார்.

இதுகுறித்து ஹரிஷ் ராவ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "எல்.பி. நகரைச் சேர்ந்த தலித் மாணவர் போலே சந்திர சேகர், பிடிஎஸ் முடித்துவிட்டு உயர் படிப்புக்காக அமெரிக்கா (டல்லாஸ்) சென்றவர்.

அதிகாலையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானார்"இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர ராவின் மருமகன் ஹரிஷ் ராவ், பலியான மாணவரின் உடலை தெலங்கானா கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Summary

An Indian student from Hyderabad was killed in a shooting incident in the US, former minister and BRS MLA T Harish Rao said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.