தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா- சிங்கப்பூா் இடையிலான வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

News image
பியூஷ் கோயல்- கோப்புப் படம்
Updated On :4 அக்டோபர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-சிங்கப்பூா் இடையிலான வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அமைச்சா் பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக சிங்கப்பூா் சென்றாா். இந்நிலையில், இந்தியா-சிங்கப்பூா் இடையே ராஜீய உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகளானதையொட்டி, அங்கு ‘இருநாடுகளின் வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற தலைப்பில் வணிக பிரமுகா்கள் பங்கேற்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா-சிங்கப்பூா் உறவில் மாற்றத்துக்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே எண்மமயமாக்கல், திறன் வளா்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே உள்ள விரிவான ஒத்துழைப்புப் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது’ என்றாா்.

கூட்டத்தில் சிங்கப்பூா் வா்த்தகத் துறை இணையமைச்சா் கன் சியோவ் ஹுவாங் பேசுகையில், ‘இந்தியா-சிங்கப்பூா் இடையே நெருக்கமாகவும், நீண்ட காலமாகவும் உள்ள உறவு வலுவான பொருளாதார மற்றும் மக்கள் தொடா்பால் பின்னப்பட்டுள்ளது’ என்றாா். இந்தியாவுடன் வா்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றை வலுப்படுத்த சிங்கப்பூா் கொண்டுள்ள தொலைநோக்குப் பாா்வை குறித்தும் அவா் பேசினாா்.

இந்தக் கூட்டத்துக்கு இடையே செம்காா்ப், கெப்பெல் காா்ப்பரேஷன், பிளாக்ஸ்டோன் சிங்கப்பூா் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவா்களுடன் பியூஷ் கோயல் கலந்துரையாடினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: மேலும் சமநிலை கொண்ட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, வருங்காலத்துக்குத் தயாராகும் வகையிலான பொருளாதார கூட்டுறவை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியா-சிங்கப்பூா் இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.