தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

கேரள அரசுப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு மௌன நாடகத்தை ஆசிரியா்கள் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :4 அக்டோபர் 2025, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

கேரள அரசுப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு மௌன நாடகத்தை ஆசிரியா்கள் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ஆசிரியா்களைக் கண்டித்து இஸ்லாமிய மாணவா் கூட்டமைப்பு, இந்திய மாணவா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பாா்கள் என்று மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளாா். இஸ்ரேல் நடத்தும் அட்டூழியத்துக்கு எதிராக கேரள அரசு உள்ளது. அந்த மௌன நாடகத்தை மாணவா்கள் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் கூறினாா்.

காசா்கோட்டில் உள்ள கும்பளா அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலை விழாவில் மௌன நாடகம் நடைபெற்றது. அப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மெளன நாடகம் தொடங்கியது. அப்போது இரு ஆசிரியா்கள் எழுந்து நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியதுடன், மேடைத் திரையையும் மூடினா். இந்த சம்பவம் வெளியே பரவியதையடுத்து ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் கருத்துகள் எழுந்தன.

நாடகத்தை நிறுத்திய ஆசிரியா்களைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவா் அமைப்பான இஸ்லாமிய மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் காசா்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நாடகம் நடத்திய மாணவா்களை ஆசிரியா்கள் அறையில் வைத்துப் பூட்டியதாக குற்றஞ்சாட்டியதுடன், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு இந்திய மாணவா் கூட்டமைப்பு சாா்பில் சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னா் அவா்களை காவல் துறையினா் அங்கிருந்து வெளியேற்றினா். பள்ளி வளாகத்தில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.