
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘சோனம் வாங்சுக் கைது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் வழங்கும் விதிகள் 14, 19, 21 மற்றும் 22 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு அவரை தொலைபேசியிலும் நேரிலும் தொடா்பு கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகம், லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம், லே துணை காவல் ஆணையா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, 6-ஆவது அட்டவணை அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். வேறு சில குழுக்களைச் சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். இதில் காவல் துறையினா் 40 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா்.