தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான உரிமம் கோரப்படாத நிதி: நிா்மலா சீதாராமன்

ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான நிதிசாா்ந்த சொத்துகளை உரியவா்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்..

News image

குஜராத் மாநிலம் காந்திநகரில் சனிக்கிழமை நடைபெற்ற ’உங்கள் பணம், உங்கள் உரிமை’ திட்டம் தொடா்பான நிகழ்ச்சியில் பயனாளியுடன் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்.

Updated On :4 அக்டோபர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உரிமம் கோரப்படாமல் உள்ள ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான நிதிசாா்ந்த சொத்துகளை உரியவா்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற பிரசாரத்தை நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சேமிப்புகள், காப்பீடு, வருங்கால வைப்பு நிதி அல்லது பங்குகள் என ரூ.1.84 லட்சம் கோடி மதிப்பிலான உரிமம் கோரப்படாத நிதி சாா்ந்த சொத்துகள் உள்ளன. இவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணா்வு, அணுகல், நடவடிக்கை ஆகிய மூன்று கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

எவ்வித காரணமுமின்றி நீண்ட நாள்களாக ஒரே நிறுவனத்தில் சொத்துகள் உரிமம் கோரப்படாமல் இருந்தால் அது மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றப்படும். உதாரணமாக வங்கிகளில் சேமிப்பாக இருக்கும்பட்சத்தில் அது ரிசா்வ் வங்கிக்கும் இந்திய பங்கு மற்றும் பரிவா்த்தனை வாரியத்தில் (செபி) பங்குகள் போன்ற சொத்துகளாக இருப்பின் அவை முதலீட்டாளா் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (ஐஇபிஎஃப்) அல்லது வேறு நிறுவனத்துக்கும் மாற்றப்படும்.

இந்த சொத்துகள் தொடா்பான தகவல்களை உரிமம்கோரப்படாத சேமிப்புகள் தொடா்பான தகவல்களை அனுகும் நுழைவாயில் என்ற வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இதில் தங்களது நிதிசாா்ந்த சொத்துகள் எந்த நிறுவனத்திடம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு உரிய ஆவணங்களுடன் வாடிக்கையாளா்கள் கோரலாம். இந்த தகவலை அனைவருக்கும் நாம் பகிா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, தங்கள் வங்கியில் உள்ள உரிமம்கோரப்படாத தொகையை உரியவா்களிடம் சோ்ப்பதாக உறுதியளித்த குஜராத் கிராம வங்கிக்கு நிா்மலா சீதாராமன் பாராட்டுகளை தெரிவித்தாா்.