மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

டார்ஜிலிங் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மமதா பானர்ஜி நாளை (அக். 6) பார்வையிடவுள்ளார்.

News image

மீட்புப் பணிகள்... - பிடிஐ

Updated On :5 அக்டோபர் 2025, 5:02 pm IST

மேற்கு வங்கத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மமதா பானர்ஜி நாளை (அக். 6) பார்வையிடவுள்ளார்.

வடக்கு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து நீர்வழித் தடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். நிலச்சரிவுகள் நேரிட்டுள்ள டார்ஜிலிங், மிரிக், ஜஸ்பிர்கான், சர்சாலி, நாக்ரகட்டா, காவ்ன் ஆகிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் உள்ளூர் மக்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, மிரிக் பகுதியில் 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

டார்ஜிலிங் பகுதியில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நாக்ரகட்டா அருகேவுள்ள தார் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் இருந்து 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தொகையைக் குறிப்பிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி நிவாரணம் அறிவித்துள்ளார். டார்ஜிலிங் பகுதி சுற்றுலாத் தலம் என்பதால், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதல்வர் மமதா நாளை (அக். 6) டார்ஜிலிங் செல்லவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.