மே.வங்கத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி!
டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவு
டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவு PTI
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 7 பேர் பலியாகினர். குளிர் பிரதேசமான டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டார்ஜிலிங் மாவட்டப் பகுதிகளில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே.வங்கம் - சிக்கிம் இடையிலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

துர்கா பூஜை முடிவடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறைக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங் வருகை தந்திருக்கும் நிலையில், கனமழை, நிலச்சரிவுகளால் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Summary

Seven people die in landslides in West Bengal's Darjeeling district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com