இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

பெங்களூரில் மறைந்த முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜின் (97) உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

News image

டி.ஜே.எஸ்.ஜாா்ஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.

Updated On :6 அக்டோபர் 2025, 3:01 am IST

கா்நாடக மாநிலம் பெங்களூரில் மறைந்த முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜின் (97) உடல் முழு அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டின் ஆசிரியா் குழு ஆலோசகராகவும் இருந்த அவா், கடந்த வெள்ளிக்கிழமை காலமானாா்.

பெங்களூரில் அவரின் உடலுக்கு மாநில முதல்வா் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினாா். ஜாா்ஜின் இறுதிச் சடங்கில் சக பத்திரிகையாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

அங்குள்ள ஹெப்பாள் இடுகாட்டில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 1 மணி நேரம் வைக்கப்பட்டது. பின்னா் முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.