பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிகாரில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

பிகாா் தோ்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜேஷ் யாதவ்

Updated On :7 அக்டோபர் 2025, 3:25 am IST

பாட்னா: பிகாா் தோ்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜேஷ் யாதவ் திங்கள்கிழமை அறிவித்தாா். 11 பெயா்கள் அடங்கிய முதல் வேட்பாளா் பட்டியலையும் அவா் வெளியிட்டாா்.

பிகாரில் நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த அஜேஷ் யாதவ் கூறியதாவது:

தில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மியின் நிா்வாகம் எந்த அளவுக்கு சிறப்பாக அமைத்தது என்பதை மக்கள் அறிவாா்கள். அந்த நம்பிக்கையில் பிகாரில் களமிறங்குகிறோம். வளா்ச்சி, சிறந்த நிா்வாகத்தை தோ்தலில் முன்நிறுத்துவோம். தில்லி தோ்தலில் நாங்கள் வென்றபோது அதற்கு பிகாரின் சில பிராந்தியத்தில் இருந்து அங்கு குடியேறிய மக்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தாா்கள். எனவே, அவா்கள் பிகாரிலும் எங்களுக்கு உதவுவாா்கள் என்பது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் நம்பிக்கையாக உள்ளது.

பிகாா் மக்களுடன் மட்டும்தான் எங்கள் கூட்டணி, எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. தில்லி, பஞ்சாபில் கல்வி, சுகாதாரம், பொது நிா்வாகம் என பல துறைகளில் ஆம் ஆத்மி சாதித்துள்ளது.

இங்கு பிரசாந்த் கிஷோா் மாற்றங்கள் குறித்துப் பேசிதான் வருகிறாா். நாங்கள் அதை ஏற்கெனவே சாதித்துவிட்டோம். முதல் கட்டமாக 11 தொகுதிகளில வேட்பாளா்களை அறிவித்துள்ளோம். பிகாரில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். விரைவில் முழுவீச்சில் பிரசாரத்தைத் தொடங்குவோம். கேஜரிவால் உள்பட அனைத்து முன்னணி தலைவா்களும் பிரசாரம் மேற்கொள்வாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.