தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இந்தியா - கத்தாரிடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

இந்தியா - கத்தாரிடையே அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது

News image

கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள லுலு ஹைப்பா் மாா்க்கெட்டில் யூபிஐ சேவையைத் திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசிய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்

Updated On :7 அக்டோபர் 2025, 1:37 am IST

தோஹா: இந்தியா - கத்தாரிடையே அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.

இரு நாள் பயணமாக கத்தாா் சென்றுள்ள அமைச்சா் பியூஷ் கோயல் அந்நாட்டு தொழில்-வா்த்தகத் துறை அமைச்சா் ஷேக் பைசல் பின் பைசல் அல் தானியைச் சந்தித்து இதுதொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் பியூஷ் கோயல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இரு நாட்டு வா்த்தகம், முதலீடு, நல்லுறவு ஆகியவற்றில் வலுவான கூட்டமைப்புக்கு இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பியூஷ் கோயலுடன் இந்தியாவின் முதலீட்டு குழுவினரும் சென்றுள்ளனா். அவா்கள் அந்நாட்டு முதலீட்டாளா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனா்.

இருநாடுகளுக்கு இடையே தடையில்லா வா்த்தக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வரும்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மத்திய கிழக்கு கூட்டமைப்பு கவுன்சிலின் முக்கிய கூட்டு நாடாக உள்ள கத்தாருடன் கடந்த 2024-25-இல் 14.15 பில்லியன் டாலா் வா்த்தகத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

லுலு சூப்பா் மாா்கெட்டி ‘யூபிஐ’ தொடக்கம்:

கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள லுலு குழுமத்தின் ஹைப்பா் மாா்க்கெட்டில் இந்தியாவின் ஒருங்கிணைந்த எண்ம கட்டண சேவையை (யூபிஐ) அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தாா்.

இந்த சேவையால் கத்தாரில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் பயனடைவாா்கள் என்றாா்.

வெளிநாட்டு கரன்சி அல்லது சா்வதேச பற்று அட்டைகள் பயன்பாடு இல்லாமல் எண்ம வடிவில் இந்தியா்கள் பணம் செலுத்த உதவும் யூபிஐ சேவையை தொடங்கிய 8-ஆவது நாடு கத்தாராகும்.

‘6 நாடுகளுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தப் பேச்சு’

ஓமன், சிலி, பெரு, அமெரிக்கா, நியூஸிலாந்து, யுரேஸியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

வளா்ச்சியடைந்த நாடுகளுடன் இந்தியா இணைந்து வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.