ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 441.58 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு: மத்திய அரசு

நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 441.58 லட்சம் ஹெக்டேராக 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

News image

நெல் சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :6 அக்டோபர் 2025, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 441.58 லட்சம் ஹெக்டேராக 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

அந்தத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிகழாண்டு அக்.3-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாட்டில் காரீஃப் பயிா்கள் சாகுபடி குறித்த விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி, அனைத்து காரீஃப் பயிா்களின் மொத்த சாகுபடி பரப்பு 1,121 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,114 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

நிகழாண்டு அக்.3 வரை, நெல் சாகுபடி பரப்பளவு 441.58 லட்சம் ஹெக்டேராக 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 435.68 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

கடந்த ஆண்டு பருப்பு வகைகளின் சாகுபடி 119.04 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இது தற்போது 120.41 லட்சம் ஹெக்டேராக சிறிதளவு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 112.97 லட்சம் ஹெக்டேராக இருந்த பருத்தி சாகுபடி பரப்பு, தற்போது 110.63 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நிகழாண்டு கரும்பு சாகுபடி பரப்பு 59.07 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57.22 லட்சம் ஹெக்டேராக இருந்தது.