
ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 மாநிலங்களில் மொத்தம் 18 மாவட்டப் பகுதிகள் பலனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. ரூ. 24,634 கோயிலான இத்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று(அக். 7) ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இத்திட்டங்களின் கீழ், இந்திய ரயில்வேயின் வலைதளம் மேலும் 894 கி.மீ. விரிவடையும். அதன்படி, மகாராஷ்டிரத்தில் 314 கி.மீ., சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்தை உள்ளடக்கி 84 கி.மீ., மத்திய பிரதேசத்தில் 84 கி.மீ., குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தை உள்ளடக்கி 259 கி.மீ. ரயில்வே தடங்கள் அமையவுள்ளன. இதன்மூலம், சுமார் 3,633 கிராமங்களுக்கு ரயில்வே வசதி மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.