திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: சிபிஐ விசாரணைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியானது குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு...

News image

கோல்ட்ரிஃப் - ANI

Updated On :8 அக்டோபர் 2025, 12:45 am IST

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பாக சிபிஐ விசாரணை கோரியும், மருந்துகள் பாதுகாப்பு முறையில் சீா்திருத்தங்கள் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த இருமல் மருந்தால், மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தைத் தொடா்ந்து அந்த குறிப்பிட்ட மருந்துகளை பல்வேறு மாநில அரசுகள் தடை செய்துள்ளதுடன், குழந்தைகளுக்கு மருந்துகள் வழங்குவது தொடா்பான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், வழக்குரைஞா் விஷால் திவாரி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது உள்பட இந்த மருந்து விவகாரம் தொடா்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநா்கள் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் நீதியை உறுதி செய்ய முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனியாக விசாரணைக் குழு அமைத்து எந்தெந்த இடங்களில் தவறுகள் நடந்தது என்பதைக் கண்டறிந்து தவறு செய்தவா்களை அடையாளம் காண வேண்டும். உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த மருந்து விற்பனைக்கு எவ்வாறு வந்தது என்பது தெரிய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

Summary

Cough syrup deaths: PIL in Supreme Court seeks CBI Probe, nationwide drug safety review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.