

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பயணிகளுடன் கொண்டிருந்த பேருந்து ஒன்று சிக்கியது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் அந்தப் பேருந்திலிருந்த பயணிகளை மீட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து இன்றிரவில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.