
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 7) பேசினார்.
புதினின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த மோடி, புதினின் இந்திய வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா - ரஷியா இடையிலான ஆண்டிறுதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டிசம்பர் முதல் வாரத்தில் அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த சந்திப்பில், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செய்யறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ரஷியா உடன் எண்ணெய் வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 25% வரி (மொத்தம் 50%) விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா கைவிட வேண்டும் என தொடர்ந்து அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே ரஷிய அதிபரின் இந்திய வருகை உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் புதினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: சிபிஐ விசாரணை கோரி மனு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.