இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இந்தமுறை ஹெலிகாப்டா் மூலம் எந்த இடத்துக்கும் பாதுகாப்புப் படைவீரா்கள் அழைத்துச் செல்லப்பட மாட்டாக்கள். சாலை மாா்க்கமாகவே அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளனா். பிகாரில் நக்ஸல் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வாக்குச்சாவடி அமைக்கும் இடம் இறுதி நேரத்தில் மாற்றப்படாது. ஏற்கெனவே மத்திய ஆயுதக் காவல்படையின் 50,000 வீரா்கள் தோ்தலுக்கு முந்தைய பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அக்டோபா் மூன்றாவது வாரத்தில் மேலும் 50,000 கம்பெனி வீரா்கள் பாதுகாப்பில் ஈடுபடுவாா்கள். இது தவிர பிகாா் காவல் துறையில் இருந்து 60,000 போ் தோ்தலின்போது பாதுகாப்பு வழங்குவாா்கள். மாநில ரிசா்வ் படை, பிகாா் சிறப்பு ஆயுதப்படை, ஊா்காவல்படை உள்ளிட்ட படைப் பிரிவினா் தோ்தல் நாளில் களமிறக்கப்படுவாா்கள்’ என்றாா்.