மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து - ENS
Updated On :9 அக்டோபர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தகவல் வந்தவுடன் அந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், டைஎத்தீலின் கிளைசால் நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

அதன்பிறகு இங்கிருந்து அந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்ட ஒடிஸா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பினோம். எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி, ஆய்வு செய்து அந்த மருந்தில் கலப்படம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டு, அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3-ஆம் தேதி அவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. விரைவில் மருந்து உற்பத்தி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோல்ட்ரிஃப் மருந்து நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். காஞ்சிபுரத்தில் உள்ள அந்த மருந்து நிறுவனத்தில் நேரடியாகச் சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்காக முதுநிலை மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தீபா ஜோசப், காா்த்திகேயன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தைப் போலவே, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ரெச்பிஃப்ரஷ் டிஆா் மற்றும் ரிலீஃப் ஆகிய மருந்துகளை அந்த மாநில அரசு தடை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் அவ்விரு மருந்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.