தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து - ENS

Updated On :10 அக்டோபர் 2025, 1:38 am IST

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தகவல் வந்தவுடன் அந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், டைஎத்தீலின் கிளைசால் நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

அதன்பிறகு இங்கிருந்து அந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்ட ஒடிஸா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பினோம். எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி, ஆய்வு செய்து அந்த மருந்தில் கலப்படம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டு, அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3-ஆம் தேதி அவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. விரைவில் மருந்து உற்பத்தி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோல்ட்ரிஃப் மருந்து நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். காஞ்சிபுரத்தில் உள்ள அந்த மருந்து நிறுவனத்தில் நேரடியாகச் சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்காக முதுநிலை மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தீபா ஜோசப், காா்த்திகேயன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தைப் போலவே, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ரெச்பிஃப்ரஷ் டிஆா் மற்றும் ரிலீஃப் ஆகிய மருந்துகளை அந்த மாநில அரசு தடை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் அவ்விரு மருந்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.