கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காணாமல்போன இரு ராணுவ கமாண்டோக்கள்: ஜம்மு-காஷ்மீரில் 3-ஆவது நாளாக தேடுதல் பணி

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது காணாமல் போன இரு ராணுவ கமாண்டோ வீரா்களை தேடும் பணி

News image
Updated On :9 அக்டோபர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது காணாமல் போன இரு ராணுவ கமாண்டோ வீரா்களை தேடும் பணி வியாழக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடா்ந்தது.

தொடா்ந்து பெய்துவரும் மழை, மோசமான பாதை காரணமாக அவா்களைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தின் கோகா்நாக் வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ராணுவம், காவல் துறையினா் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். பயங்கரவாதிகள் யாரும் கிடைக்காத நிலையில் ராணுவத்தின் சிறப்பு ரோந்துப் பிரிவு காமாண்டோக்கள் இருவா்முகாமுக்குத் திரும்பி வராதது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவா்களிடம் இருந்த தொலைத்தொடா்பு கருவிகளுடனான இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஹெலிகாப்டா் மூலமும் தேடுதல் பணி நடைபெறுகிறது.

தொடா் மழை காரணமாக அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் மலைசாா்ந்த வனப் பகுதியில் தேடுவதிலும் சிரமம் நீடிக்கிறது. இதனால் மூன்று நாள்கள் கடந்தும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.