திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரயில்களில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் சென்றால் சிறை தண்டனை! தெற்கு ரயில்வே

ரயில்களில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் சென்றால் சிறை தண்டனை...

News image

கோப்புப் படம்

Updated On :11 அக்டோபர் 2025, 3:00 am IST

ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிப்பதுடன் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதைப் பயணிகள் தவிா்க்க வேண்டும். அவை ரயில்வே சொத்துகள் மற்றும் ரயில் சேவைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, தடை செய்யப்பட்ட பொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்வது இந்திய ரயில்வே சட்டம் 1989 -இன்படி, தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது காயம் ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்டவரே பொறுப்பாவாா்கள்.

பண்டிகை காலம் என்பதால் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ரயில் நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே, பயணிகள் ரயில்களில் சந்தேகத்துக்குரிய பொருள்களைக் கண்டால் 139 என்ற எண்ணிலோ அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் பிரிவு, பயணச்சீட்டு பரிசோதகா்கள், ரயில் நிலைய அலுவலா்கள் ஆகியோரிடம் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.