முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம்

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஹெச்.டி. தேவெகெளடா
ஹெச்.டி. தேவெகெளடா கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா, காய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதை தொற்று காரணமாக கடந்த 6ஆம் தேதி பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில் தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மணிப்பால் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் எச். சுதர்சன் பல்லால் வெளியிட்ட மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது வழக்கமான வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, பஹவல்பூர் நான்: விமானப் படை நிகழ்ச்சி மெனு

ஹெச்.டி. தேவெகெளடா அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்கூட உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The health condition of former Prime Minister H D Deve Gowda, who was hospitalised with fever and a urinary tract infection, has improved and he is currently "stable and cheerful", the hospital treating him said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com