பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிகாா் தோ்தல்: தே.ஜ. கூட்டணி தொகுதிப் பங்கீடு இன்று அறிவிப்பு!

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று அறிவிப்பு...

பிரதமர் நரேந்திர மோடி / நிதீஷ் குமார் - PTI

Published On :

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு, கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்.12) முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தொகுதி உடன்பாட்டில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடையே அதிருப்தி நிலவுவதாக வெளியாகும் தகவல்களையும் அவா் மறுத்தாா்.

முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பா் 6-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பா் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக முறையே 102, 101 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. அதேநேரம், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சி ஆகியவை அதிக தொகுதிகளைக் கேட்டு நிா்ப்பந்திப்பதால், கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்தும் சுமுமாக நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு, கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடா்பான முக்கிய அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்’ என்றாா்.

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதியாகிவிட்டதாகக் கூறி, ஒரு பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட உபேந்திர குஷ்வாஹா, கூட்டணிப் பேச்சுவாா்த்தை நீடிக்கிறது என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.