ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!' -பிரியங்கா

தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் இந்தியப் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு...

News image
தில்லியிலுள்ள ஆப்கன் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீா்கான் முத்தாகி- PTI
Updated On :11 அக்டோபர் 2025, 1:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி 6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்தடைந்தார். இந்த நிலையில், புது தில்லியிலுள்ள ஆப்கன் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீா்கான் முத்தாகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர்கள்கூட இல்லை.

இந்நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்களோ அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களோ ஒருவர்கூட இல்லாதது, திட்டமிட்டே பெண்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டுவரும் நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஆப்கன் தலைமை தீர்மானித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண் பத்திரிகையாளர்கள்  இல்லாத செய்தியாளர் சந்திப்பு

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(அக். 11) பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் நீக்கப்பட்டதைக் குறித்து பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மகளிர் உரிமைகளுக்காக நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் என்பது, ஒவ்வொரு தேர்தலின்போதும் நீங்கள் உயர்த்திப்பிடித்து முன்மொழிந்து பேசும் நடத்தைகள் மட்டுமல்ல என்பது உண்மையானால், இந்தச் செயல், அதாவது இந்தியாவின் மிக சாமர்த்தியமான சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, பெண்களை நாட்டின் முதுகெலும்பாகவும் நாட்டின் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

summary

female journalists excluded at Afghan FM press meet: Priyanka Gandhi Reacts strongly to this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.