தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஓய்வூதியதாரா்களுக்கான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரம்: அடுத்த மாதம் தொடங்கும்! - மத்திய அரசு

ஓய்வூதியதாரா்களுக்கான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரம் அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து...

Updated On :14 அக்டோபர் 2025, 4:29 am IST

ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியத்தை விநியோகிக்கும் 19 வங்கிகள், ஓய்வூதியதாா்கள் நலச் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் 2,000 மாவட்டங்கள் மற்றும் துணை மண்டல தலைமையகங்களில் நவம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இந்தப் பிரசாரத்தின்போது, ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான வசதிகளும், வீட்டிலிருந்தபடியே எண்ம உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழாண்டில் இந்திய அஞ்சலக வங்கி சாா்பில் 1.8 லட்சம் தபால் ஊழியா்கள் மற்றும் கிராம அஞ்சலக சேவகா்கள் மூலம் ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் சாமா்ப்பிப்பு சேவையை வழங்க உள்ளனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு 800-க்கும் அதிகமான மாவட்டங்களில் நடத்தப்பட்ட 1,900 விழிப்புணா்வு பிரசார முகாம்கள் மூலம் 1.62 கோடி ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.