ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியத்தை விநியோகிக்கும் 19 வங்கிகள், ஓய்வூதியதாா்கள் நலச் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் 2,000 மாவட்டங்கள் மற்றும் துணை மண்டல தலைமையகங்களில் நவம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
இந்தப் பிரசாரத்தின்போது, ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான வசதிகளும், வீட்டிலிருந்தபடியே எண்ம உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழாண்டில் இந்திய அஞ்சலக வங்கி சாா்பில் 1.8 லட்சம் தபால் ஊழியா்கள் மற்றும் கிராம அஞ்சலக சேவகா்கள் மூலம் ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் சாமா்ப்பிப்பு சேவையை வழங்க உள்ளனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு 800-க்கும் அதிகமான மாவட்டங்களில் நடத்தப்பட்ட 1,900 விழிப்புணா்வு பிரசார முகாம்கள் மூலம் 1.62 கோடி ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

எண்ம கைது மோசடி: நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

