கொல்லம்: கேரள மாநிலம் நெதுவத்தூர் பகுதியில், கிணறுக்குள் குதித்த பெண்ணைக் காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
நெடுவத்தூரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண், திங்கள்கிழமை அதிகாலை கிணறுக்குள் குதித்த நிலையில், அவரை மீட்கச் சென்ற அவரது நண்பர் சிவகிருஷ்ணன் மற்றும் தீயணைப்புத் துறை வீரர் சோனி குமார் என மூன்று பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை நள்ளிரவில், கோட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், நெடுவத்தூரில் உள்ள 80 அடி ஆழக் கிணறுக்குள் ஒரு பெண் குதித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
உடனடியாக விரைந்துச் சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த சிவகிருஷ்ணன் என்பவரும் கிணறுக்குள் குதித்து அவரைத் தேடியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரையும் காப்பாற்ற தீயணைப்புத் துறை வீரர் கிணறுக்குள் சென்ற நிலையில், மூவரும் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மூவரையும் மருத்துவர்கள் பரிசோதித்து, மூவருமே இறந்துவிட்டதாகக் கூறினர். குடும்பத் தகராறு காரணமாக அர்ச்சனா கிணறுக்குள் குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு: விடுதிக் காப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

பிறந்த 5 நாள்களில் மருத்துவமனையில் பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


