ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குப்வாராவில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் திங்கள்கிழமை நள்ளிரவில் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அவர்களை எச்சரித்தனர். அதையும் மீறி முன்னேறிய பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில், இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com