/

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது குறித்து...

News image

நிதீஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :15 அக்டோபர் 2025, 7:01 pm IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்கட்டமாக 57 வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

234 தொகுதிகளையுடைய பிகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 101 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவுள்ள நிலையில், தற்போது 57 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளதாவது, சாதி அடிப்படையிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிடவுள்ளனர். பிகார் மக்கள் தொகையில் 36% உள்ள மிகவும் பின்தங்கிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கும் அதே கூட்டணியின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே 5 இடங்களில் போட்டி நிலவி வருகிறது. ஆலெளலி, சோன்பார்சா, ராஜ்கிர், ஏக்மா மற்றும் மோர்வா ஆகிய தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

எனினும் இந்த 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதில், ஆலெளலி என்பது சிராக் பாஸ்வானின் சொந்த ஊராகும்.

நிதீஷ் குமார் அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Summary

Bihar polls JD(U) names first list of 57 candidates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.