
துப்பாக்கியில் இரவிலும் துல்லியமாக குறிவைக்க உதவும் அதிநவீன கருவிகளை ரூ.659.47 கோடியில் வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஷிக் 716 துப்பாக்கியில் இணைத்து இந்த கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த கருவியைப் பொருத்துவதன் மூலம் இரவு நேரத்திலும் குறிதவறாமல், 500 மீட்டர் வரை இலக்குகளைத் தாக்க முடியும். உள்நாட்டு தளவாட தயாரிப்பு நிறுவனங்களான எம்கேயு, மெட்பிட் டெக்னாலஜிஸ் இணைந்து இக்கருவிகளைத் தயாரித்து வழங்க இருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் 51 சதவீதத்துக்கு மேல் உள்நாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தின்கீழ் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் பலனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாட்டு எல்லையில் இரவு நேரங்களில்தான் அதிக ஊடுருவல்கள் நிகழ்கின்றன. இதை எதிர்கொள்ளும் வகையில் இந்த கருவிகள் வாங்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.