பிகாரில் ரூ.34 கோடி பணம், மதுபானம், இலவசப் பொருள்கள் பறிமுதல்

பிகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குவந்த நாள் முதல் ரூ.33.97 கோடி மதிப்புள்ள பணம், மதுபானம், போதைப்பொருள், மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

பிகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குவந்த நாள் முதல் ரூ.33.97 கோடி மதிப்புள்ள பணம், மதுபானம், போதைப்பொருள், மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், "வேட்பாளர்கள் செய்த தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க செலவு பார்வையாளர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்றடைந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் ரூ. 33.97 கோடி மதிப்புள்ள பணம், மதுபானம், போதைப்பொருள், இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதி மீறல் உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின்போது சாதாரண குடிமக்கள் சிரமப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ கூடாது என்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். "சிவிஜில்' செயலி மூலம் தேர்தல் விதிமீறல் புகார்களை அளிக்கலாம்' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com