ஆந்திரத்தில் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு!

ஆந்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.
விமானநிலையத்தில் பிரதமர் மோடியை வரவற்ற முதல்வர்
விமானநிலையத்தில் பிரதமர் மோடியை வரவற்ற முதல்வர்
Published on
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு பகிர்ந்த எக்ஸ் பதிவில்,

ஆந்திர மக்களின் சார்பாக பிரதமர் மோடியை மாநிலத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்திற்குச் செல்ல உள்ளார்.

பின்னர் பிரதமர் கர்னூலுக்குச் செல்லும் மோடி, அங்கு அவர் சுமார் ரூ. 13,430 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.

மேலும், இந்த நிகழ்வில் அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார் என்று வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu on Thursday welcomed Prime Minister Narendra Modi in the state, where the PM will inaugurate and lay the foundation stone for multiple development projects.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com