பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை ராகுல் சந்தித்தது பற்றி...

News image
உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்- Photo : X / Rahul Gandhi
Updated On :17 அக்டோபர் 2025, 4:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலியைச் சேர்ந்த ஹரிஓம் என்ற இளைஞரை, ட்ரோன் மூலம் கண்காணித்து திருடுபவர் என தவறுதலாக நினைத்து சிலர் தாக்கியதில் அவர் பலியானார்.

Story image

ஹரிஓம் வால்மீகியின் கொடூரமான கொலை, ஒரு நபரின் கொலை மட்டுமல்ல, அது மனிதநேயம், அரசியலமைப்பு மற்றும் நீதியின் படுகொலை என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

Story image

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் கான்பூர் விமான நிலையத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, ரேபரேலியில் உள்ள ஹரிஓம் வால்மீகி வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

summary

Rahul meets family of Dalit youth killed in UP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.