உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியில் சனிக்கிழமை சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் உடல் கருகி பலியானார்.
பலியான இளைஞர் அங்கித் (25) என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து வட்ட அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், உடல் முழுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. காரும் முற்றிலும் எரிந்தது.
காரின் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
உடல் கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Summary
A man was charred to death on Saturday after the CNG car he was travelling in caught fire here, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் டிரோன் தாக்குதலில் இந்தியர் பலி!

குருகிராம் சாலை விபத்து: 5 போலீஸாா் உயிரிழப்பு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

புழல் அருகே தீ விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



