தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் இருக்க மாட்டாரா? அமித் ஷா சூசகம்

பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருக்க மாட்டார் என்பது போல அமித் ஷாவின் சூசகப் பேச்சு அமைந்துள்ளது.

News image

அமித் ஷா - நிதீஷ் குமாா் - கோப்புப்படம்

Updated On :18 அக்டோபர் 2025, 11:56 am IST

பாட்னா: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருக்க மாட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமாரை அறிவிக்காமல், தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள்தான், அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று அமித் ஷா பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றாலும்கூட, மீண்டும் நிதீஷ் குமார் முதல்வராவாரா என்பது தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, பிகார் தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் முதலில், அவர்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள், பிறகு, கட்சிப் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து, யார் தலைமையில் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிரத்தில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்து முதல்வராக்கி, பிறகு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற போது, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அது போல பிகாரிலும் நடக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது அரசியல் நோக்கர்களுக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.