ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தகவல்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :18 அக்டோபர் 2025, 1:21 pm IST

புது தில்லி: நாட்டில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால், குளிர்சாதன வசதி, வாஷிங்மெஷின், தொலைக்காட்சி ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட நன்மை, நாட்டில் உள்ள மக்களுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்றடைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோருக்குக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. சுமார் 54 பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது. இதனை அரசு கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

புது தில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு சந்தைகளில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.