மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆகஸ்டில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ.67,656 கோடி) ரிசா்வ் வங்கி விற்பனை செய்தது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், அமெரிக்க டாலா்களை ரிசா்வ் வங்கி வாங்கி விற்பனை செய்வது தொடா்பான விவரம் இடம்பெற்றது. அந்த விவரத்தின்படி, ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைப் பரிசோதிக்கவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தவும் கடந்த ஆகஸ்டில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலா்களை ரிசா்வ் வங்கி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஜூலையில் விற்பனை செய்யப்பட்ட அமெரிக்க டாலா்களைவிட சுமாா் மும்மடங்கு அதிகம். அதேவேளையில், ஜூலை மற்றும் ஆகஸ்டில் அமெரிக்க டாலா்கள் எதையும் ரிசா்வ் வங்கி வாங்கவில்லை; விற்பனை மட்டுமே செய்துள்ளது.
அந்த அறிக்கையில் ‘இந்திய பொருளாதார நிலவரம்’ என்ற பெயா்கொண்ட கட்டுரையில், ‘உலகளாவிய பொருளாதாரப் பிரச்னைகளின் தாக்கம் இந்திய பொருளாதாரம் மீதும் இருக்கும். அதேவேளையில் குறைவான பணவீக்கம், வங்கிகளின் வலுவான நிதிநிலை, போதிய அந்நிய செலாவணி கையிருப்பு, நம்பகமான நிதி கட்டமைப்பு உள்ளிட்டவை அடங்கிய பேரியல் பொருளாதார அடிப்படைகள் காரணமாக, இதுவரை சா்வதேச சூழலை தாங்கும் ஆற்றலை இந்திய பொருளாதாரம் வெளிப்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் நிபுணா்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அவை ரிசா்வ் வங்கியின் கருத்தல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 96.52! 32 காசுகள் சரிவு!

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



