ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகார் தேர்தல்: பாஜகவை வீழ்த்தாமல் ஓயமாட்டோம்! -பிரசாந்த் கிஷோர்

எங்கள் வேட்பாளர்களைக் கட்டாயப்படுத்தி வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்தனர்: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

News image
பிரசாந்த் கிஷோர்- PTI
Updated On :21 அக்டோபர் 2025, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னா: பாஜகவை வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக். 20) முடிவடைந்தது.

இத்தேர்தலில் அரசியல் ஆலோசனையாளராக இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் தான் நிறுவியுள்ள புதியதொரு அரசியல் கட்சியான ஜன் சுராஜ் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதுடன், தான் வேட்பாளராகக் களமிறங்கப் பொவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இன்று(அக். 21) செய்தியாளர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர், “ஜன் சுராஜ் வேட்பாளர்கள் சிலர் வற்புறுத்திக் கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை திரும்பபெறச் செய்திருக்கின்றனர்(யாரென்பதை வெளிப்படையாக அவர் குறிப்பிடவில்லை). நாங்கள் பயந்து போயிருக்கிறோம் என்றதொரு மாயையை பாஜக கட்டமைக்க துடிக்கிறது.

பிகாரில் பாஜகவை தோற்கடித்து; தேசிய ஜனநாயகக் கூட்டணியை வேரறுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பிகார் தேர்தல் குறித்து மிகுந்த அச்சத்தில் இருப்பவர் ஒருவர் யாரெனில், அது ‘பாஜகதான்’” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்தலில் யார் அல்லது எந்தக் கட்சி வென்றாலும் அரசமைக்கப் போவது என்னவோ பாஜகதான் என்ற பெயரை பாஜக பெற்றுள்ளது.

‘எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள். இல்லையேல், லாலுவின் மோசமான ஆட்சி அமைந்துவிடும்’ என்ற பிரசரத்தை இப்போது பாஜக பிகாரில் கையிலெடுத்துள்ளது. நவ. 14-இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். அப்போது உண்மை வெளியாகும்.

பிரசாந்த் கிஷோரும், என்னுடன் உள்ள ஜன் சுராஜ் கூட்டாளிகளும் எவரொருவரையும் பார்த்து பயம் கொண்டவர்கள் அல்ல. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வேண்டுமானாலும் அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் பாருங்கள்; அல்லது எத்தனை வேட்பாளர்களை முடியுமோ அத்தனை பேரை அவரவர் வீடுகளிலேயே சிறை வைத்துத்தான் பாருங்களேன்... நாங்கள் ஒன்றும் மகாகாத்பந்தன் அல்ல; தேர்தலில் எழுச்சியுடன் போட்டியிடுவோம்” என்றார்.

summary

"Jan Suraaj candidates forced to withdraw their nominations, will not relent till we defeat the BJP": Prashant Kishor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.