லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து...

News image
தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது- படம் - எக்ஸ் / ராஜ்நாத் சிங்
Updated On :22 அக்டோபர் 2025, 2:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தடகள ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் மற்றும் ஆசியப் போட்டிகளில் தடகள ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பலமுறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இத்துடன், இந்திய ராணுவத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இணைந்த அவருக்கு நயிப் சுபேதார் எனும் பதவி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, படிப்படியாக அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு சுபேதார் மேஜர் என்ற பதவியை அடைந்தார். இந்த நிலையில், தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக். 22) வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தடகள விளையாட்டில் வழங்கப்படும் பல உயரிய விருதுகளை வென்று குவித்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

summary

Javelin thrower Neeraj Chopra has been awarded the honorary rank of Lieutenant Colonel in the Indian Army.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.