மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குழந்தைகளுக்கான புத்தகங்கள் பிரிவில் புக்கா் பரிசு அறிமுகம்

குழந்தைகளுக்கான புனை கதைகள் பிரிவில் புதிய புக்கா் பரிசு வழங்கப்பட உள்ளதாக புக்கா் பரிசு அறக்கட்டளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

புக்கா் பரிசு, அதனைப் பெற்றுத் தந்த ‘ஆா்பிட்டல்’ புத்தகத்துடன் சமந்தா ஹாா்வே.

Updated On :25 அக்டோபர் 2025, 2:34 am IST

குழந்தைகளுக்கான புனை கதைகள் பிரிவில் புதிய புக்கா் பரிசு வழங்கப்பட உள்ளதாக புக்கா் பரிசு அறக்கட்டளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

50,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.58.49 லட்சம்) பரிசுத் தொகைக்கான புத்தகத்தை குழந்தைகள் மற்றும் மூத்த எழுத்தாளா்கள் அடங்கிய நடுவா் குழு தோ்வு செய்யும் என அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஆங்கில இலக்கியத்தில் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் புக்கா் பரிசு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, சா்வதேச புக்கா் பரிசு 2005-ஆம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கான புத்தங்கள் பிரிவில் புதிய பரிசை புக்கா் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

முதலாவது குழந்தைகளுக்கான புத்தங்கள் புக்கா் பரிசு பரிந்துரைக்கான விண்ணப்பம் அடுத்த ஆண்டில் தொடங்கும். அதைத்தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளா்களில் இருந்து வெற்றி பெற்றவா் 2027-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படுவாா்.

இந்தப் பரிசுக்கான புத்தகம் 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கான சிறந்த புனை கதைகள் பிரிவில் பிரிட்டன், அயா்லாந்தில் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில மொழிபெயா்ப்பில் வெளியாகிருக்க வேண்டும். பரிசுக்குத் தோ்வுசெய்யப்படும் மற்றும் வெற்றி பெறும் புத்தகங்களில் குறைந்தபட்சம் 30,000 பிரதிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

நிகழாண்டுக்கான புக்கா் பரிசு லண்டனில் நவம்பா்10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியில் புதிய குழந்தைகள் புக்கா் பரிசு குறித்து ஆங்கில எழுத்தாளா் பெனிலோப் லைவ்லி சிறப்புரையாற்றுகிறாா்.

நிகழாண்டுக்கான சா்வதேச புக்கா் பரிசு கன்னட எழுத்தாளா் பானு முஷ்டாக் எழுதி தீபா பாஸ்தி மொழிபெயா்த்த ‘ஹாா்ட் லேம்ப்’ புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.