பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அடுத்த ஆண்டில் தோ்தல்: ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய தோ்தல் ஆணையம்

News image

தேர்தல் ஆணையம்

Updated On :24 அக்டோபர் 2025, 7:26 am IST

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவிருக்கும் தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்பின்போது, அந்தந்த மாநிலங்களில் தோ்தல் ஆயத்தப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அவா்கள் எதிா்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான தயாா்நிலையை ஆய்வு செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளும் தில்லியில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைந்து செய்து முடிக்குமாறு தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் குறித்த ஒட்டுமொத்த செயல்முறையையும் தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கினா். அப்போது, தலைமைத் தோ்தல் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக இந்தியத் தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

இச்சூழலில், அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மட்டும் இந்திய தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் தனித்தனியே கலந்துரையாடியதாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முதல் கட்டமாக இந்த 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெறுவது குறிப்பிட்டத்தக்கது.