காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப் பத்திரிகை: அக். 30-க்கு விசாரணை ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப் பத்திரிகை: அக்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு
Published on

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பான விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா? என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையிடம் இருந்து சில தெளிவான விளக்கங்கள் தேவைப்படுவதால், விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com