பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் நாக்பூருக்கே திரும்பியது.
நாக்பூரில் இருந்து தலைநகர் தில்லிக்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை மாலை 6.38 மணிக்கு புறப்பட்டது.
ஆனால் பறவை மோதியதால் விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் மீண்டும் நாக்பூருக்கே திரும்பியது.
விமானம் நாக்பூரில் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து விமானம் நாக்பூரில் பராமரிப்பு சோதனைகளுக்கு உட்பட்டு வருவதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால் விமானம் ரத்து செய்யப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் கௌலிங் (கவர்) சேதமடைந்தது என்று தகவல் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தால் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.
Summary
An Air India flight with over 150 passengers from Nagpur to Delhi had to return to Babasaheb Ambedkar International Airport shortly after take-off on Friday due to a bird hit that damaged the engine cowling (cover), said a source.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

ஏர் இந்தியா விமான விபத்து முதலாண்டு நினைவு நாள்! பாதிக்கப்பட்டோர் நிலை என்ன?

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



