எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆந்திரம், தமிழகத்தில் முன்னேற்பாடுகள்: மத்திய அமைச்சரவை செயலா் ஆலோசனை

ஆந்திரம், தமிழகத்தில் ‘மோந்தா’ புயல் முன்னேற்பாடுகள் பற்றி...

News image
Updated On :25 அக்டோபர் 2025, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

‘மோந்தா’ புயல் பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக, ஆந்திரம், தமிழகம், ஒடிஸா மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன் தலைமையில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சனிக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.

புயலின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக ஆந்திரம், தமிழகம், புதுச்சேரி தலைமைச் செயலா்களும், ஒடிஸா கூடுதல் தலைமைச் செயலரும் குழுவிடம் எடுத்துரைத்தனா்.

தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் மீட்பு-நிவாரணக் குழுக்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன; மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை மையம் ஆகியவை, மாநில அரசுகள் மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய உள்துறைச் செயலா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிா்ச் சேதத்தைத் தவிா்ப்பதுடன், உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும். சேதங்கள் ஏற்பட்டால், அத்தியாவசிய சேவைகள் குறுகிய காலகட்டத்துக்குள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சரவைச் செயலா் அறிவுறுத்தினாா்.