அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

பிரதமர் மோடி நீராட செயற்கையாக யமுனை உருவாக்கப்பட்டிருப்பதாக கட்சிகள் விமர்சனம்

News image

செயற்கை யமுனை - ஆம் ஆத்மி எக்ஸ் பக்கம்

Updated On :27 அக்டோபர் 2025, 0:13 pm IST

பிகார் மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, யமுனையில் இன்று நீராடவிருக்கும் நிலையில், அவருக்காக செயற்கையாக ஒரு குளம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் விமர்சனம் செய்திருக்கிறது.

மாசடைந்த யமுனை நதியில் ஒட்டுமொத்த மக்களும் நீராட அனுமதிக்கப்படும் நிலையில் பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடி நீராடுவதற்காக மட்டும் தனியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி செயற்கையாக ஒரு யமுனை நதியை உருவாக்கியிருக்கியிருப்பதாகத் தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யமுனை நதிக்கரையில் வாசுதேவர் துறைமுகம் அருகே சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி, அதில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நீராட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனை மேற்கோள்காட்டி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சத் பூஜை குறித்து மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பாஜக கேலி செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் சத் அல்லது சாத் என்று அழைக்கப்படும் பூஜை நாளில், மக்கள் அனைவரும் நீர்நிலைகளில் புனித நீராடி, சூரியனை வழிபடுவது வழக்கம்.

பிகாரில் நவம்பர் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில மக்களுடன் சேர்ந்து சத் பூஜையில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் மோடி. அதன்படி, இன்று அவர் யமுனை நதியில் நீராடுகிறார். ஆனால், அவர் நீராட, யமுனை நதியில் ஏற்பாடு செய்யாமல், யமுனைக்கு அருகே வெட்டப்பட்ட புதிய நீர்நிலையில்தான் பிரதமர் மோடி இன்று நீராடுகிறார் என்றும், இதற்காக அந்த நீர்நிலை முழுக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் லாரிகளில் கொண்டு வந்து நிரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது சமூக வலைத்தளங்களில் பரவியிருப்பதால் பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.