பிகார் மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, யமுனையில் இன்று நீராடவிருக்கும் நிலையில், அவருக்காக செயற்கையாக ஒரு குளம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் விமர்சனம் செய்திருக்கிறது.
மாசடைந்த யமுனை நதியில் ஒட்டுமொத்த மக்களும் நீராட அனுமதிக்கப்படும் நிலையில் பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடி நீராடுவதற்காக மட்டும் தனியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி செயற்கையாக ஒரு யமுனை நதியை உருவாக்கியிருக்கியிருப்பதாகத் தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் வாசுதேவர் துறைமுகம் அருகே சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி, அதில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நீராட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனை மேற்கோள்காட்டி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சத் பூஜை குறித்து மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பாஜக கேலி செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
வட இந்திய மாநிலங்களில் சத் அல்லது சாத் என்று அழைக்கப்படும் பூஜை நாளில், மக்கள் அனைவரும் நீர்நிலைகளில் புனித நீராடி, சூரியனை வழிபடுவது வழக்கம்.
பிகாரில் நவம்பர் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில மக்களுடன் சேர்ந்து சத் பூஜையில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் மோடி. அதன்படி, இன்று அவர் யமுனை நதியில் நீராடுகிறார். ஆனால், அவர் நீராட, யமுனை நதியில் ஏற்பாடு செய்யாமல், யமுனைக்கு அருகே வெட்டப்பட்ட புதிய நீர்நிலையில்தான் பிரதமர் மோடி இன்று நீராடுகிறார் என்றும், இதற்காக அந்த நீர்நிலை முழுக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் லாரிகளில் கொண்டு வந்து நிரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சமூக வலைத்தளங்களில் பரவியிருப்பதால் பேசுபொருளாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடி

ஆந்திரத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



