மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி உயிரிழப்பு

ஜார்க்கண்டில் வெடிகுண்டு தாக்குதலில் 10 வயது சிறுமி பலியானது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :28 அக்டோபர் 2025, 10:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜாா்க்கண்ட் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து 10 வயது பழங்குடியின சிறுமி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மாவோயிஸ்ட் அமைப்பினா் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளனா். இந்நிலையில், அந்தப் பகுதியில் பழங்குடியின சிறுமி ஒருவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் இலைகளை சேகரிப்பதற்காகச் சென்றுள்ளாா். அவா் நடந்து சென்றபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை அவா் தெரியாமல் மிதித்ததால் அது வெடித்துச் சிதறியது. இதில் அந்தச் சிறுமி இரு கால்களும் சிதைந்து உயிரிழந்தாா் என்று தெரிவித்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை சிறுமியின் குடும்பத்துக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 கிலோ வெடிகுண்டு மீட்பு: சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த 40 கிலோ எடையுள்ள வெடிகுண்டை காவல் துறையினா் கண்டுபிடித்தனா்.

இந்தக் குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

summary

A 10-year-old girl has been killed in a bomb attack believed to have been planted by Maoists in the state of Jharkhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.