ராஜஸ்தானில் ‘மோந்தா’ புயலால் மிகக் கனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இன்று (அக். 28) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பண்டி மாவட்டத்தின் நைன்வா பகுதியில் 130 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் பிற பகுதிகளான உதய்பூர், கோட்டா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை(அக். 29) முதல் மழையின் தீவிரம் குறையத்தொடங்கினாலும், அடுத்த 4 - 5 நாள்களுக்கு ராஜஸ்தானின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ராஜஸ்தானின் மேற்கு பகுதிகளான பைகானெர் மற்றும் ஷேகவதி மண்டலங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Heavy to very heavy rainfall lashed parts of southern and eastern Rajasthan, with Nainwa in Bundi district recording the highest at 130 mm in the last 24 hours till Tuesday morning, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

முதல் போட்டியிலேயே சொதப்பிய சிஎஸ்கே; பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


